அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க புலிகள் முயற்சி
கொழும்பு:
இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் முயற்சியில்விடுதலைப்புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத்தை நீக்க வேண்டும் என்று பல மாதங்களாகக்கோரிக்கை விடுத்தும் கூட இலங்கை அரசு அதைக் கண்டு கொள்ளாததால் பேச்சுவார்த்தையைப்புறக்கணிப்பதாகப் புலிகள் அறிவித்திருந்தனர்.
இதுபோலவே மேலும் பல முக்கியமான தங்களுடைய கோரிக்கைகளை அரசு புறக்கணித்துவருவதாகவும் புலிகள் குற்றம் சாட்டினர். பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதோடு, அடுத்த மாதம்ஜப்பானில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும்புலிகள் அறிவித்தனர்.
இதையடுத்து தாய்லாந்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. அடுத்த சுற்று பேச்சுவார்த்தைஎப்போது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளில் நார்வே தூதுக்குழுவினரும் பேச்சுவார்த்தை கண்காணிப்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள புலிகளின் அரசில் ஆலோசகரான ஆன்டன்பாலசிங்கம் நார்வே தூதுக் குழுவினருடன் இன்று சில முக்கிய பேச்சுவார்த்தைகளைநடத்தியுள்ளார்.
நார்வே நாட்டின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் விடார் ஹெல்கெசன், இலங்கைக்கானநார்வே நாட்டின் அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம், இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ்ப்ராட்ஸ்கர் ஆகியோரை இன்று காலை சந்தித்துப் பேசினார் பாலசிங்கம்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் குறித்து அவர்களுடன்பாலசிங்கம் பேசியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தச் சந்திப்பு எங்கு நடைபெற்றது என்றவிவரம் வெளியிடப்படவில்லை.
இன்று அல்லது நாளை பாலசிங்கம் தன்னுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்திப்பார்என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதுகுறித்து இருவரும் பேசுவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே நார்வே குழுவினரும் இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதர் யாசுஷிஅகாஷியும் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துவிவாதித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications