For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டீக் கடை ஊழிரியன் நேர்மை: போலீஸ் ஆணையர் பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சாலையில் கிடந்த ரூ. 29,400 பணத்தை பத்திரமாக எடுத்து வந்து போலீஸில் ஒப்படைத்த டீக் கடை ஊழியருக்குசென்னை நகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ரெங்கையா நாயுடு தெருவில் உள்ள ஒரு டீக் கடையில் வேலை பார்த்துவருபவர் வேல்முருகன். இவர் அப்பகுதியில் டீ எடுத்துச் சென்றபோது ஒரு பை கிடந்தது. அதைத் திறந்துபார்த்தபோது, அதில் ரூ. 29,400 பணம் இருந்தது.

இதையடுத்து தனது டீக் கடையின் உரிமையாளர் சுவாமிநாதனிடம் சென்றார். இருவரும் சேர்ந்து அதை போலீசில்ஒப்படைத்துவிட முடிவு செய்தனர்.

உடனடியாக இருவரும் போலீஸ் ஆணையர் அலுவலகம் வந்து அதை கமிஷ்னர் விஜயக்குமாரிடம்ஒப்படைத்தனர். அவர்களது நேர்மையைப் பாராட்டிய ஆணையர் விஜயக்குமார், வேல்முருகனுக்கு ரூ. 1,000பரிசும் வழங்கினார்.

வேல்முருகன நேர்மையாக நடந்து கொள்ள உதவியாக இருந்த டீக் கடை உரிமையாளர் சுவாமிநாதனையும்ஆணையர் பாராட்டினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X