தமிழ் பேசும் தூதர்களை நியமிக்க கோரிக்கை
பெங்களூர்:-
தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்திய தூதராக தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று உலகத் தமிழர்பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் நிறைவேட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. கும்பகோணம் தீ விபத்தில் 93 குழந்தைகள் மாண்ட நிகழ்ச்சி அதிர்ச்சியையும், அளவில்லாத துயரத்தையும்அளித்துள்ளது. வளமான எதிர்காலம் காத்திருந்த நிலையில் கருகி மடிந்த இந்த இளம் மொட்டுகளுக்கு இம்மாநாடு தலைதாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.
2. தமிழ்த் தொண்டில் சிறந்தவரும், உலகத் தமிழர் பேரமைப்பு உருவாக்கப் பணிகளில் முன்னின்றவருமானதமிழறிஞர் மெய்யப்பனார் மறைவிற்கு மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
3. தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறை தலைவராகப் பணியாற்றிவரான பேராசிரியர்நெடுஞ்செழியன், தமிழறிஞர் குணசீலன் மற்றும் பல தமிழர்கள் மீது கர்நாடக அரசு பொய் வழக்கு தொடர்ந்துசிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கர்நாடக அரசை உலகத் தமிழர்பேரமைப்பு வற்புறுத்துகிறது.
4. இந்தியக் குடியரசு தலைவர் அப்துல் கலாம், தனது நாடாளுமன்ற உரையில் தமிழ் செம்மொழி ஆக்கப்படும்என்று அறிவித்ததை உலகத் தமிழர் பேரமைப்பு வரவேற்கிறது; நன்றி கூறுகிறது.
இதற்கான அரசு ஆணையை உடனே வெளியிடுமாறு மத்திய அரசை உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது.
5. உலக நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழர்கள் இழிவுகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகித் தவிக்கும்நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய இந்திய தூதரகங்களில்மொழிப்பிரச்சினை காரணமாக அலட்சியம் காட்டப்படுகிறது.
எனவே தமிழர்கள் பெருமளவில் வாழும் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயஸ், தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழர்களையே தூதுவர்களாக நியமிக்க வேண்டும் என உலகத் தமிழர்பேரமைப்பு வலியுறுத்துகிறது.
6. இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.இலங்கைக்கு அருகில் பகை நாடுகள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு உடன்பாடு என்ற பெயரில்இந்தியாவின் உதவியோடு ஈழத்தமிழர்களை ஒடுக்கவே இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது.
இதை மத்திய அரசு உணர்ந்து உடன்பாட்டினைத் தவிர்க்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications