தமிழ் பேசும் தூதர்களை நியமிக்க கோரிக்கை
பெங்களூர்:-
தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்திய தூதராக தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று உலகத் தமிழர்பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் நிறைவேட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. கும்பகோணம் தீ விபத்தில் 93 குழந்தைகள் மாண்ட நிகழ்ச்சி அதிர்ச்சியையும், அளவில்லாத துயரத்தையும்அளித்துள்ளது. வளமான எதிர்காலம் காத்திருந்த நிலையில் கருகி மடிந்த இந்த இளம் மொட்டுகளுக்கு இம்மாநாடு தலைதாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.
2. தமிழ்த் தொண்டில் சிறந்தவரும், உலகத் தமிழர் பேரமைப்பு உருவாக்கப் பணிகளில் முன்னின்றவருமானதமிழறிஞர் மெய்யப்பனார் மறைவிற்கு மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
3. தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறை தலைவராகப் பணியாற்றிவரான பேராசிரியர்நெடுஞ்செழியன், தமிழறிஞர் குணசீலன் மற்றும் பல தமிழர்கள் மீது கர்நாடக அரசு பொய் வழக்கு தொடர்ந்துசிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கர்நாடக அரசை உலகத் தமிழர்பேரமைப்பு வற்புறுத்துகிறது.
4. இந்தியக் குடியரசு தலைவர் அப்துல் கலாம், தனது நாடாளுமன்ற உரையில் தமிழ் செம்மொழி ஆக்கப்படும்என்று அறிவித்ததை உலகத் தமிழர் பேரமைப்பு வரவேற்கிறது; நன்றி கூறுகிறது.
இதற்கான அரசு ஆணையை உடனே வெளியிடுமாறு மத்திய அரசை உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது.
5. உலக நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழர்கள் இழிவுகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகித் தவிக்கும்நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய இந்திய தூதரகங்களில்மொழிப்பிரச்சினை காரணமாக அலட்சியம் காட்டப்படுகிறது.
எனவே தமிழர்கள் பெருமளவில் வாழும் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயஸ், தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழர்களையே தூதுவர்களாக நியமிக்க வேண்டும் என உலகத் தமிழர்பேரமைப்பு வலியுறுத்துகிறது.
6. இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.இலங்கைக்கு அருகில் பகை நாடுகள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு உடன்பாடு என்ற பெயரில்இந்தியாவின் உதவியோடு ஈழத்தமிழர்களை ஒடுக்கவே இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது.
இதை மத்திய அரசு உணர்ந்து உடன்பாட்டினைத் தவிர்க்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications