For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினமலர் மீது தாக்குதல்: பாமக பிரமுகர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

கடலூர் தினமலர் கிளை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சிப் பிரமுகர்குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கடலூர் தினமலர் நாளிதழ் கிளை அலுவலகத்தில் பாமகவினர் வன்முறையில்ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். அய்யாவுக்கு (பாமகநிறுவனர் ராமதாஸுக்கு) எதிராக இனிமேல் செய்தி வெளியிட்டால் நடப்பதே வேறு என்று செய்தியாளர்களைமிரட்டி விட்டுச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த தாக்குதல்தொடர்பாக போலீஸார் பாமகவினர் 4 பேரைக் கைது செய்திருந்தனர். அவர்களில் பாமக மாநில துணைஒருங்கிணைப்புச் செயலாளர் பதவி வகித்து வந்த டி.ஆனந்தன் என்பவரை தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

ஆனந்தன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் கடலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. தினமலர் மீதானதாக்குதலுக்கும் ஆனந்தன்தான் தலைமை ஏற்று நடத்தியுள்ளார். எனவே அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X