அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக கோரிக்கை
சேலம்:
திமுகவின் இரண்டு நாள் சிறப்பு மாநாடு சேலத்தில் குமரகிரி மலையடிவாரத்தில் இன்று காலைமிகப் பிரம் மாண்டமாகத் தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்றும் மாநாட்டில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் மாபெரும் தோல்வியடைந்த ஜெயலலிதா பேசுகையில், மத்தியில் மக்கள்ஆட்சி மாற்றத்தை விரும்பியதாகவும் அதனால் தான் அதிமுக தோற்றதாகவும், இந்தத் தோல்விக்கும்மாநில அரசின் செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சொன்னார்.
ஆனால், அவருக்கு வசதியாக ஒரு விஷயத்தை அவர் மறந்துவிட்டார். மக்களவைத் தேர்தலோடுமங்களூர் இடைத் தேர்தலுக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில்வென்றார். இது யாருக்குக் கிடைத்த தோல்வி? மத்திய அரசுக்கா? ஜெயலலிதாவே இது உங்களுக்குக்கிடைத்த தோல்வி. அதிமுக அரசை மக்கள் நிராகரித்துவிட்டதால் கிடைத்த தோல்வி அது என்றார்ஸ்டாலின்.
இரவு 9 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் பேசுகிறார். அதைத் தொடர்ந்து சங்கத்தமிழ் இசைநாட்டிய நாடகத்துடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.
நாளை கட்சிப் பிரமுகர்கள் பலரும் பேசுகின்றனர். மாலை 4 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள்நிறைவேற்றப்படுகின்றன். இரவு 8.30 மணிக்கு கருணாநிதி நிறைவுரை ஆற்றுகிறார்.
திமுக மாநாட்டையொட்டி சேலம் நகர் முழுவதும் கட்சிக் கொடிகள், தோரணங்கள், மின் விளக்குகளால் ஆனநூற்றுக்கணக்கான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலில் திராவிட இயக்க வரலாற்றுப் புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தொண்டர்களுக்குகுறைந்த கட்டணத்தில் உணவும் வழங்கப்படுகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications