ஜெ. வழக்கு: 20 மொழி பெயர்ப்பாளர்கள் தேவை !
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான தமிழ் ஆவணங்களை ஆங்கிலத்திற்குமொழி பெயர்க்க 20 மொழி பெயர்ப்பாளர்கள் தேவை என்று பெங்களூர் நகர அமர்வு நீதிமன்றம் கோரிக்கைவிடுத்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா மீதான ரூ. 66 கோடி சொத்து வழக்கை விசாரிக்க பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றவளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீதிபதியாக பச்சாபுரே நியமிக்கப்பட்டுள்ளார். சென்னைதனி நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் சில வாரங்களுக்கு முன் பெங்களூர் தனிநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த ஆவணங்களை மொழி பெயர்க்கும் பணியில் 20 கல்லூரி பேராசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாககர்நாடக அரசு கூறி வருகிறது.
ஆனால், பேராசிரியர்கள் கல்லூரிப் பணிகளுடன் இதை கவனிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.மொழி பெயர்ப்புப் பணி மிகவும் மெதுவாக நடப்பதால், ஆவணங்களை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க உடனே20 மொழி பெயர்ப்பாளர்கள் தேவை என்று பெங்களூர் நகர அமர்வு நீதிமன்ற பதிவாளர் பி.வி.பாட்டீல்கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தனை பேரும் கிடைத்த பின்னர் மொழி பெயர்ப்புப் பணி விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
இதனால் நீதிமன்ற விசாரணை மேலும் பல வாரங்களாகலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications