இலங்கையிலிருந்து 23 தமிழ் அகதிகள் வருகை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து 7 குடும்பங்களைச் சேர்ந்த 23 தமிழ் அகதிகள் 2 பிரிவுகளாக தமிழகம் வந்தனர்.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கடும் சண்டை காரணமாக அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தவண்ணம் உள்ளனர்.

நேற்று இலங்கையிலிருந்து 2 பிரிவுகளாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

தலைமன்னார், மன்னார், வவுனியா பகுதிகளைச் சேர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் நேற்று அரிச்சமுனைக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் ஆவர். அவர்களை அதிகாரிகள் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேர் சென்னைக்கு விமானம் மூலம் வந்தனர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+