இலங்கையிலிருந்து 23 தமிழ் அகதிகள் வருகை
ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து 7 குடும்பங்களைச் சேர்ந்த 23 தமிழ் அகதிகள் 2 பிரிவுகளாக தமிழகம் வந்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கடும் சண்டை காரணமாக அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தவண்ணம் உள்ளனர்.
நேற்று இலங்கையிலிருந்து 2 பிரிவுகளாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
தலைமன்னார், மன்னார், வவுனியா பகுதிகளைச் சேர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் நேற்று அரிச்சமுனைக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் ஆவர். அவர்களை அதிகாரிகள் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேர் சென்னைக்கு விமானம் மூலம் வந்தனர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications