பெங்களூரில் நாய் மீது விமானம் மோதல் - போக்குவரத்து பாதிப்பு
பெங்களூர்: பெங்களூர் விமான நிலையத்தில் நேற்று கிங்பிஷர் விமானம் கிளம்பியபோது ரன்வேயில் நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் அதன் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பல மணி நேரத்திற்கு விமான நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
பெங்களூர் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு 29 பயணிகளுடன் கிங் பிஷர் விமானம், ஹைதராபாத்துக்குக் கிளம்பியது. விமானம் ஓடுபாதையில் சென்றபோது திடீரென ஒரு நாய் ரன்வேயில் ஓடிவந்து விமானத்தின் முன் சக்கரத்தில் மோதியது. இதனால் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது.
நாய் மோதியதால் விமானத்தின் முன் சக்கரம் உடைந்து போனது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதால் விமானத்திற்குள் இருந்த 2 பயணிகள் லேசான காயமடைந்தனர். உடனடியாக பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டனர்.
விமான நிலையமும் மூடப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் செய்வதறியாமல் திகைத்தனர். பல மணி நேரமாகியும் விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற விமானமும் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது.
பல மணி நேரமாக விமானங்கள் கிளம்பாததால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். விமான நிலைய அதிகாரிகள் முறையான தகவல்களைக் சொல்லாமல் அலைக்கழிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். அதிகாலையில்தான் விமானப் போக்குவரத்து சீரடைந்து விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications