குண்டுவெடிப்பில் யாரும் பலியாகவில்லை - கூறுகிறது திரிபுரா அரசு

அகர்தலாவில் நேற்று மாலை 7 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் பலியானதாக செய்திகள் கூறின. ஆனால் இதை திரிபுரா அரசு மறுத்துள்ளது.
குண்டுவெடிப்பில் யாரும் பலியாகவில்லை, 80 பேர் காயமடைந்துள்ளனர் என்று அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் மானிக் சர்க்கார் கூறுகையில், குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. குண்டுவெடிப்பு குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் ஆலோசனை நடத்தினேன். மாநில தலைமைச் செயலாளர் சசி பிரகாஷ், உள்துறை செயலாளர் மதுகர் குப்தாவுடன் ஆலோசனை நடத்தினார்.
காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும்.
இந்த சம்பவத்தில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. விசாரணை பல கோணங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
திரபுரா மாநிலத்தில் நடந்துள்ள முதல் தீவிரவாத சம்பவம் இது என்பதால் எங்களது விசாரணையை அனைத்துக் கோணங்களில் முடுக்கி விட்டுள்ளோம்.
இதுதொடர்பாக மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் இணைந்து செயல்படும் என்றார்.
கடந்த 2 மாதங்களில் ஹூஜி அமைப்பைச் ேசர்ந்த 3 பேர் அகர்தலாவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். கடந்த மார்ச் மாதம் வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி மாமுன் மியான் என்பவர் பிடிபட்டார். அவருக்கும், சர்வதேச தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
இந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில், திரிபுரா உள்ளதால், வங்கதேச தீவிரவாதிகள் திரிபுராவை தங்களது புதிய வேட்டைக்காடாக மாற்ற முயல்வதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பல பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பேருந்துப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது .முக்கிய சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications