4 மாத கொல்கத்தா குழந்தைக்கு புத்துயிர் தந்த சென்னை டாக்டர்கள்
சென்னை: பிறந்து நான்கு மாதமே ஆன தனிஷா என்ற குழந்தைக்கு, சென்னை அடையார் மலர் மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய அறுவைச் சிகிச்சை செய்து அந்தக் குழந்தைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
மலர் மருத்துவமனையைச் சேர்ந்த தலைமை இருதயவியல் நிபுணரான டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான டாக்டர்களே இந்தப் பெருமைக்குரிய செயலை செய்துள்ளனர்.
தங்களது குழந்தையின் உயிரைக் காத்த இந்த டாக்டர்கள், கடவுளுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்று தனிஷாவின் பெற்றோர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர்.
தனிஷாவின் சிகிச்சைக்காக வெறும் அறுவைச் சிகிச்சையோடு நின்று விடாமல், அதற்குத் தேவையான ரூ. 1.5 லட்சம் நிதியையும் சென்னை டாக்டர்களே திரட்டியும்
கொடுத்து உதவியுள்ளனர்.
தனிஷாவுக்குத் தேவையான அனைத்தையும் மலர் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அழகிய ரோஜாப் பூவைப் போல தனிஷாவை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர் சென்னை டாக்டர்கள்.
தனிஷாவுக்கு சயனோட்டிக் கான்ஜெனிட்டல் என்ற இருதய குறைபாடு பிறவியிலேயே இருந்துள்ளது. இந்த பிரச்சினை இருதயத்தின் வலது பக்கத்தில் ஏற்படும். இதுகுறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்குகையில், தனிஷாவின் வலது பக்க நுரையீரல் சரியாக வளரவில்லை. இது மிகவும் அரிதான கேஸாகும்.
இது மிகவும் வழக்கத்திற்கு விரோதமானது, இதை நாங்கள் சிமிட்டர் சின்ட்ரோம் (Scimitar Syndrome) என்று கூறுவோம்.
குழந்தைகளுக்கு கான்ஜெனிட்டல் இருதயக் கோளாறு ஏற்பட்டால் ஒரே வருடத்தில் உயிரிழப்பு ஏற்படும். பிறந்து ஒரு வருடத்தில் இறக்கும் குழந்தைளுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சினைதான் இருக்கும்.
எனவே குழந்தை பிறந்தவுடன் உடனடியாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை செய்யப்பட வேண்டியது அதை விட அவசியம். இல்லாவிட்டால் அது உயிரிழப்பில் போய் முடிந்து விடும் என்றார்.
ஏப்ரல் 7ம் தேதி தனிஷாவுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.
குழந்தை தனிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளுக்கு ரத்த அழுத்தம் 120 எம்.ஜி என்ற அபாயகர அளவில் இருந்தது. தனிஷா வயதிலான குழந்தைக்கு 20 எம்.ஜி.தான் இருக்க வேண்டும்.
இதையடுத்து வயாகரா, சில்டன்பிரில் ஆகியவற்றைப் பயன்படுத்தி ரத்த அழுத்தத்தைக் குறைத்துள்ளனர். அதன் பின்னர் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாம்.
தொடர்ந்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், எங்களது பங்கு அறுவைச் சிகிச்சை மட்டுமே. ஆனால் குழந்தை 40 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்தபோது அதை கண்ணும் கருத்துமாக, கவனத்துடன் பார்த்துக் கொண்ட செவிலியர்களின் பணிதான் மிகப் பெரியது என்று மருத்துவமனை செவிலியர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
இன்று தனிஷா ஆரோக்கியமாகவும், அழகாகவும், புன்னகை பூத்தபடி பெற்றோரின் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறாள். பெற்றோரின் கண்களில் ஆனந்தம் பிளஸ் நிம்மதி தவழ்கிறது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications