போபாலில் மணப்பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை- கொந்தளிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தைச் சேர்ந்த 152 பெண்களுக்கு, முதல் அமைச்சரின் கன்னியாதானம் திட்டத்தின் இலவச கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கல்யாணம் தொடங்கி தாலி கட்ட சில நிமிடங்கள் இருந்தபோது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அதிகாரிகளும், அங்கு கூடியிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த அனைத்து மணமகள்களுக்கும் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் சோதனைக்கு அரசு உத்தரவிட்டது.
அந்த சோதனையின்போது 14 பெண்கள் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் ஒரு பெண் 18 வயது நிரம்பாதவர் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் விலக்கப்பட்டனர். அதன் பின்னர் மீதம் இருந்த 138 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
மத்தியப் பிரதேச அரசின் இந்த இலவச திருமணத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ. 5000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டன.
கல்யாணத்தின்போது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், 14 பேர் கர்ப்பமாக இருந்ததும் ஊரில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே கல்யாணமானவர்களை பணத்துக்கு ஆசைப்பட்டு புரோக்கர்கள் உள்ளே நுழைத்து விட்டதாகவும், அரசு மோசடி செய்வதாகவும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் கல்யாணத்தின்போது சலசலப்பு ஏற்பட்டது.
அதேசமயம், அனைத்துப் பெண்களுக்கும் கன்னித்தன்மை சோதனை நடத்த உத்தரவிடப்பட்டதால் மணமகள்களும், அவர்களின் குடும்பத்தினரும் கோபமடைந்தனர்.
இதுகுறித்து ஒரு மணமகள் கூறுகையில், என்னிடம் கன்னித்தன்மை சோதனைக்குப் போகுமாறு அதிகாரி ஒருவர் கூறியபோது நான் போக மறுத்து விட்டேன். ஆனால் சோதனையை நடத்தி நான் கன்னிப் பெண்தான் என்பதை நிரூபித்தால் மட்டுமே மண்டபத்திற்குள் விடுவோம் என்று அவர் கட்டாயமாக கூறியதால் நான் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டேன் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications