உயிர் உள்ளவரை அதிமுக தான்- ஓ.பி.

ஓ.பன்னீர் செல்வம் திமுகவுக்குத் தாவப் போவதாக சில பத்திரிக்கைளில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது கட்சிகள் தாவும் சீசன் என்பதால், குறிப்பாக திமுகவை நோக்கி ஏகப்பட்ட பேர் பாதயாத்திரை போல கிளம்பிக் கொண்டிருப்பதால் ஓ.பியும் அதிமுகவை விட்ட தாவப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் இதை பன்னீர் செல்வம் இன்று திட்டவட்டமாக மறுத்தார். அரசாங்கமே இப்படிப்பட்ட வதந்திகளை கிளப்பி விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினர் 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தவழக்கு தேனி மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
கடந்த மாதம் மதுரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
முதல் முறையாக இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரன் பாலமுருகன் ஆகியோர் மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணவள்ளி முன்னிலையில் இன்று காலை ஆஜரானார்கள். இந்தவழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் வரவில்லை.
இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
பின்னர் வெளியில் வந்த பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு முதல்வர் பதவியும், பொருளாளர் பதவியும் தந்த பொதுச் செயலாளர் இதயதெய்வம் புரட்சித் தலைவியை விட்டு நான் பிரியப் போவதாக அரசாங்கமே பத்திரிக்கைகள் மூலமாக வதந்தி பரப்பி வருகிறது.
கடைசி வரை, எனது உயிர் உள்ளவரை அதிமுகவில்தான் கடைசி தொண்டனாகத்தான் இருப்பேன் என்றார் பன்னீர் செல்வம்.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications