பொங்கலுக்குள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் - இல.கணேசன்
வேலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்குள் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பாஜக சார்பில் கோவை உலகத் தமிழர் மாநாட்டின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
வேலூர் வந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் மீதான பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்ய ஆளுங்கட்சியின் கூட்டணியினரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். மக்களவையே அந்தக் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் தமிழக எம்.பி.க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இலங்கை ராணுவத்தினரால் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துதல் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. வருகிற 29-ந்தேதி தஞ்சாவூரிலும் அக்டோபர் 6-ந்தேதி ராமேசுவரத்திலும் 8-ந்தேதி சேலத்திலும் 9-ந்தேதி சென்னையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
உலகத்தமிழ் மாநாடு கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் நடத்தப்பட இருக்கிறது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. உலக தமிழர்களின் நலனை பற்றி அக்கறை எடுக்கும் மாநாடாக இது அமைய வேண்டும்.
வருகிற தைப்பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் சொந்த குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட வேண்டும்.
வருகிற தைப்பொங்கலுக்கு முன்னதாக இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணாவிட்டால் கோவையில் உலக தமிழ் மாநாடு நடக்கின்ற இடத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழ் மாநாடும் தேவை, அதே சமயம் உலக தமிழர்களின் சுதந்திரமும் தேவை. அதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்தால் அதற்கு பா.ஜ.க. ஒத்துழைப்பு கொடுக்க தயார்.
தமிழக - கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக தேடுதல் வேட்டையை அரசு தொடங்கி உள்ளது. நாங்கள் இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம். அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாதிகள் தொடர்பாக சாதக பாதகங்களை பாராமல் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக யாரும் நிரூபிக்கவில்லை என்று தேர்தல் அதிகாரி கூறி இருக்கிறார். தவறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற உறுதியை தேர்தல் அதிகாரிகள் தரவேண்டும். அதற்கேற்ப எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை மேம்படுத்த வேண்டும்.
சமச்சீர் கல்வி திட்டங்களை எப்படி அமல்படுத்துவது என்று சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பும் வகையில், சென்னையில் வருகிற அக்டோபர் 10-ந்தேதி கருத்தரங்கினை நடத்த உள்ளோம்.
இந்து கோவில்களின் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க கோரி வருகிற 5-ந் தேதி இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதாவினர் கலந்து கொள்வார்கள் என்றார் கணேசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications