சென்னை டிஏவி பள்ளி முதல்வரிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதமா?
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள பிரபல டிஏவி ஆடவர் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சதீஷிடம், பள்ளி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து சதீஷுக்கு ஆதரவாக பெற்றோர்கள் திரண்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்ய சமாஜத்தின் சார்பில், சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.ஏ.வி. என்ற பெயரில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், கோபாலபுரம் டி.ஏ.வி., ஆண்கள் சீனியர் செகண்டரி பள்ளி (சி.பி.எஸ்.இ.) மிகவும் பிரபலம்.
பொதுத் தேர்வுகளில், இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடங்களைப் பிடிக்கத் தவறுவதில்லை. இந்த பள்ளியின் முதல்வராக சதீஷ் (48) பணி புரிந்து வந்தார்.
1983ம் ஆண்டு இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, பின் 1995ல் முதல்வராக உயர்ந்தார். கடந்த ஆண்டுக்கான சிறந்த நல்லாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளையும் பெற்றவர் இவர்.
இந்நிலையில், திடீரென சதீஷ் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகிகள் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கி விட்டதாக சதீஷ் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற் காகவும் கடுமையாக உழைத்து வந்தேன். கடந்த 23ம் தேதி பகல் 2.30 மணிக்கு, நிர்வாக உறுப்பினர்கள் பர்மிளா கவர், ரவி மல்ஹோத்ரா உள்ளிட்ட மூன்று பேர் எனது அறைக்கு வந்து, உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்தால் தான், செயலர் பள்ளிக்கு வருவார் என்று தெரிவித்தனர்.
சமச்சீர் கல்வி திட்டம் குறித்து, ஸ்ரீபெரும்புதூரில் மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். கல்வியாளர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுத்தனர். இதில், எப்படி கலந்துகொள்ளலாம் என்றும் கேள்வி எழுப்பினர். என் மீதான நடவடிக்கைக்கு, "ஈகோ' மட்டும் தான் காரணம். வேறு ஒன்றும் கிடையாது.
ராஜினாமா கடிதத்தை பெறுவதற்கு முன், எனது வக்கீலுடன் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை பெற்றனர். பொதுத்தேர்வு முடியும் வரையாவது, பணியில் தொடர அனுமதியுங்கள் என்று கேட்டேன். மறுத்து விட்டனர்.
திடீரென பாதியில் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட் டிருப்பதை நினைத்து வருந்துகிறேன். பெற்றோர்கள், மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அவர்கள் விருப்பத்தை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றார் சதீஷ்.
சதீஷ் விவகாரத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், இந்தப் பள்ளி எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்கு சதீஷின் பெயரும் சென்னையில் மிகவும் பிரபலம். இவரது செயல்பாடுகளால் கவரப்பட்டு பலரும் தங்களது பிள்ளைகளை இங்கு சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சதீஷின் வீட்டுக்கு ஏராளமான பெற்றோர் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் சதீஷே மீண்டும் முதல்வராக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications