சமச்சீர் கல்வியை அமலாக்க அவசரச் சட்டம்
சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், சமச்சீர் கல்வி, வரும் 2010ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் அமல்படுத்தப்படும்.
2011ம் ஆண்டிலிருந்து 2ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பிலும், அடுத்தடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
மேலும், மாநிலக் கல்வி திட்டம், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன், ஓரியண்டல் ஆகிய நான்கு கல்வி வாரியங்களை ஒருங்கிணைத்து மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம்
தொடங்கப்படும் என்றும், அதேபோல ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்ட முறையும் கொண்டு வரப்படும் எனவும் அரசு அறிவித்தது.
இதையடுத்து தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு அடி்படையில், சமச்சீர் கல்விக்கான வரைவுப் பொதுப் பாடத்திட்டம் தயாரித்து முடிக்கப்பட்டு விட்டது. இப்போது பாடநூல்கள் எழுதும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி முறையை நடைமுறைப்படுத்திட மாநிலப் பொதுப் பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்துக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி தலைவராக இருப்பார். பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலாளர், தேர்வுத்துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்கக இயக்குநர், இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications