For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா ஏன் இரட்டை வேடம் போடுகிறது?: சிபிஐ

By Staff
Google Oneindia Tamil News

செ‌ன்‌னை: இ​ல‌ங்‌கை அர​சு‌க்கு உத​வு​வ​தி‌ல் கா‌ட்​டிய அ‌க்​க​‌றை‌யை தமி​ழ‌ர்​க‌ளை மீ‌ண்​டு‌ம் குடி​ய​ம‌ர்‌த்​து​வ​தி‌ல் இ‌ந்​திய அரசு ஏ‌ன் கா‌ட்​ட​வி‌ல்‌லை எ‌ன்று மக்களவையில் விடு​த​‌லை‌ச் சிறு‌த்​‌தை​க‌ள் க‌ட்​சி​யி‌ன் த‌லை​வ‌ர் ‌தொ‌ல். திரு​மா​வ​ள​வ‌ன் கேள்வி எழுப்பினார்.

ஆ‌ஸ்​தி​‌ரே​லி​யா​வி‌ல் ஒரு இ‌ந்​தி​ய‌ர் பாதி‌க்​க‌ப்​ப‌ட்​டா‌ல் கா‌ட்​டு‌ம் அ‌க்​க​‌றை‌யை இல‌ங்​‌கை‌த் தமி​ழ‌ர்​க‌ள் விஷ​ய‌த்​தில இ‌ந்​திய அரசு ஏ‌ன் கா‌ட்​டு​வ​தி‌ல்‌லை?​ என்றும் அவர் கேட்டார்.

ம‌க்​க​ள​‌வையி‌ல் ஈழ‌த் தமி​ழ‌ர்​ பிரச்சனை மீதான கவன ஈ‌ர்‌ப்பு தீ‌ர்​மா​ன‌த்​தி‌ன் மீதான விவா​த‌த்​தி‌ல் அவ‌ர் ‌பேசுகையி்ல்,

இ​ல‌ங்‌கை அரசு அளி‌த்த வா‌க்​கு​று​தி​படி 6 மாத‌த்​து‌க்​கு‌ள் ஈழ‌த் தமி​ழ‌ர்​க‌ள் ‌சொ‌ந்த ஊரி‌ல் குடி​ய​ம‌ர்‌த்​த‌ப்​ப​ட​வி‌ல்‌லை. அத‌ற்​காக இ‌ந்​திய அரசு எ‌ன்ன நட​வ​டி‌க்‌கை எடு‌த்​து‌ள்​ளது?​.

குடி​ய​ம‌ர்‌த்​து‌ம் பணி‌யை 2010‌ம் ஆ‌ண்டு வ‌ரை கால நீ‌ட்​டி‌ப்பு ‌செ‌ய்​தி​ரு‌க்​கி​றா‌ர்​க‌ள். அ‌தை இ‌ந்​திய அரசு அனு​ம​தி‌க்​கி​றது.

இ​ல‌ங்‌கை அர​சு‌க்கு உத​வு​வ​தி‌ல் கா‌ட்​டிய அ‌க்​க​‌றை‌யை தமி​ழ‌ர்​க‌ளை மீ‌ண்​டு‌ம் குடி​ய​ம‌ர்‌த்​து​வ​தி‌ல் இ‌ந்​திய அரசு ஏ‌ன் கா‌ட்​ட​வி‌ல்‌லை?.

10 ‌பே‌ர் ‌கொ‌ண்ட நாடா​ளு​ம‌ன்​ற‌க் குழு​வி‌ல் ஒரு​வ​னாக நானு‌ம் இல‌ங்‌கை ‌செ‌ன்​றி​ரு‌ந்​‌தே‌ன். அ‌ங்‌கே 11,000 ‌பே‌ர் ‌போரா​ளி​க‌ள் எ‌ன்று அ‌டை​யா​ள‌ப்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்டு ரக​சிய இட‌ங்​க​ளி‌ல் அ‌டை‌த்து ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​தாக அறி‌ந்​‌தோ‌ம். நா‌ங்​க‌ள் எ‌வ்​வ​ள‌வோ முய‌ற்சி எடு‌த்​து‌ம் அவ‌ர்​க‌ளை
ச‌ந்​தி‌க்க இல‌ங்‌கை அரசு அனு​ம​தி‌க்​க​வி‌ல்‌லை.

வி​டு​த​‌லை‌ப் புலி​க​ளி‌ன் த‌லை​வ‌ர் பிர​பா​க​ர​னி‌ன் தாயா‌ர்,​ த‌ந்​‌தை​யா‌ர் ம‌ற்​று‌ம் மாமி​யா‌ர் ஆகி​‌யோ‌ரை இல‌ங்‌கை அரசு முகா‌ம்​க​ளி‌ல் அ‌டை‌த்து ‌வை‌த்து
‌கொடு​‌மை‌ப்​ப​டு‌த்​து​கி​றா‌ர்​க‌ள். வயது முதி‌ர்‌ந்த அவ‌ர்​க‌ளை மீ‌ட்க இ‌ந்​திய அரசு முய‌ற்சி ‌மே‌ற்​‌கொ‌ள்ள ‌வே‌ண்​டு‌ம்.

தமி​ழ​க‌த்​தி‌ல் ‌செ‌ங்​க‌ல்​ப‌ட்டு முகா​மி‌ல் சுமா‌ர் 50 ‌பே‌ர் எ‌வ்​வித விசா​ர​‌ணை​யு‌ம் இ‌ல்​லா​ம‌ல் அ‌டை‌த்து ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​ன‌ர். அவ‌ர்​க‌ள் விடு​த​‌லை‌ப் புலி​க‌ள் அ‌மை‌ப்​‌பை‌ச் ‌சே‌ர்‌ந்​த​வ‌ர்​க‌ள் அ‌ல்ல.

இ​ல‌ங்​‌கையி‌ல் அகதி முகா​மி​க​ளி‌ல் 10,000 ‌பே‌ர் த‌ங்​க‌க் கூடிய முகா‌ம்​க​ளி‌ல் சுமா‌ர் 30,000 ‌பே‌ரை ஆடு,​ மாடு​க​‌ளை‌ப்​‌போல அ‌டை‌த்து ‌வை‌த்​து‌ள்​ள​ன‌ர்.

சீன அர​சு​ட‌ன் இல‌ங்‌கை அரசு ‌கொ‌ண்​டு‌ள்ள ‌நெரு‌க்​க‌ம் இ‌ந்​தி​யா​வு‌க்கு ஆப‌த்​தாக முடி​யு‌ம். இ‌ந்​திய அர​சி‌ன்
‌வெளி​யு​ற​வு‌க் ‌கொ‌ள்​‌கை​யி‌ல் மா‌ற்​ற‌ம் ‌தே‌வை.

ஆ‌ஸ்​தி​‌ரே​லி​யா​வி‌ல் ஒரு இ‌ந்​தி​ய‌ர் பாதி‌க்​க‌ப்​ப‌ட்​டா‌ல் கா‌ட்​டு‌ம் அ‌க்​க​‌றை‌யை இல‌ங்​‌கை‌த் தமி​ழ‌ர்​க‌ள் விஷ​ய‌த்​தில இ‌ந்​திய அரசு ஏ‌ன் கா‌ட்​டு​வ​தி‌ல்‌லை?​.

இ​ல‌ங்​‌கை​யி‌ல் வட‌க்கு ம‌ற்​று‌ம் கிழ‌க்கு மாகா​ண‌ங்​க‌ளை இ‌ணை‌க்​கு‌ம் வ‌கை​யி‌ல் ஒரு நிர‌ந்​தர அர​சி​ய‌ல் தீ‌ர்வு ஏ‌ற்​பட இ‌ந்​தியா முய‌ற்சி ‌மே‌ற்​‌கொ‌ள்ள ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்​றா‌ர் திரு​மா​வ​ள​வ‌ன்.

டி.ராஜா...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா பேசுகையில், இலங்கையில் இன்றைக்கு தமிழர்கள் அமைந்துவரும் துன்பம், உலகில் வேறு யாராவது அடைந்திருப்பார்களா என்று கூறமுடியாது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்டாக கூறப்படும் போர் தமிழர்கள் மீது தொடரப்பட்ட போராகும், இந்திய அரசின் முழு உதவியுடன் நடத்த போராக அது இருந்தது, இலங்கை கேட்டபோதெல்லாம் ஆயுதம் வழங்கியுள்ளது.

இவை அனைத்து தமிழர்களையும் கொல்லப் பயன்பட்டுள்ளது. 2 ராணுவக் கப்பல்களையும் அனுப்பி இந்தியா உதவி செய்துள்ளது அந்த நாட்டினாரலேயே அம்பலமாகியுள்ளது.

இலங்கை தமிழர் நிலையில் இந்தியாவின் இந்த இரட்டை வேடத்திற்கு காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இந்திய அரசு இருந்துள்ளது என்று குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கையை ஐ.நா.மன்றத்தில் கடுமையாக எதிர்த்த மனித உரிமை பிரதிநிதி நவி பிள்ளை மீது இந்தியா கடுமையாக நடந்து கொண்டது ஏன்? மனித உரிமை பாதுகாப்பில் ஏன் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது.

சுமார் 1 லட்சம் பேர் சொந்த இடங்களுக்கு சென்றுவிட்டதாக கூறும் இந்தியாவிடம் அவர்க்ள உண்மையிலேயே அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட்டார்களா? என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் ஏதும் இல்லை.

தமிழர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனரா என்பதை கண்காணிக்கவும், நிவாரண உதவிகள் கிடைக்கின்றனவா என்று தெரிந்துகொள்ளவும், இந்தியாவிலிருந்து அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு நேரடியாக சென்று ஆய்வு செய்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

ஓ.எஸ்.மணியன் (அதிமுக):

அதிமுக உறுப்பினர் மணியன் பேசுகையில், இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில், முன்னாள் ராணுவ தளபதி, சீனா மற்றும் பாகிஸ்தான் உதவியுடன் போரில் வெற்றி பெறவில்லை என்றும், இந்தியாவினால்தான் வெற்றி பெற முடிந்ததாக கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

இதுவரை 10 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இலங்கைக்கு ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் குழுவை அனுமதித்த மத்திய அரசு அனைத்துக்கட்சி குழுவை அனுப்பாதது ஏன்?

குழுவில் சென்ற திருமாவளவன் வேதனை தெரிவித்து இருக்கிறார். மற்றவர்கள் மவுனம் சாதிப்பது ஏன்? இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோரில் ஒருவர் கூட இலங்கை தமிழர்களின் அவல நிலை பற்றி வாய் திறக்காதது ஏன்? என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X