For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரபு நாடு​க​ளில் வேலை இழந்து திரும்​பும் இந்​தி​யர்​க​ளுக்​கு உதவ சிறப்பு நிதி​யம்

By Staff
Google Oneindia Tamil News

Indian workers in UAE
டெல்லி: பொரு​ளா​தார நெருக்​க​டி​யால் வேலையை இழந்து அரபு நாடு​களி​லி​ருந்து தாய​கம் திரும்​பும் இந்​தி​யர்​க​ளின் மறு​வாழ்​வுக்​காக,​ சிறப்பு நிதி​யத்தை ஏற்​ப​டுத்​த மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது.

ஐக்​கிய அரபு நாடுகளில் முக்கியமான துபாய் கடன்
நெருக்​கடி வலை​யில் சிக்​கி​யுள்​ளதால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

குறிப்பாக ரியல் எஸ்​டேட், கட்டுமானத் தொழில்துறை மிகக் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இந்தத் துறைகளில் பணியில் உள்ள ஏராளமான இந்​தி​யர்​கள் தங்​க​ளது வேலையை இழக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

இந் நிலையில் இந்த நெருக்​க​டி​யால் வேலையை இழந்து தாய​கம் திரும்​பும் இந்​தி​யர்​க​ளின் மறு​வாழ்​வுக்கு உதவ மத்​திய அரசு விரி​வான திட்​டத்தை வகுத்து வருகிறது.

இது தொடர்பான அறிவிப்பு விரை​வில் வெளி​யி​டப்படும் என்று வெளி​நாடு வாழ் இந்​தி​யர்​க​ளின் விவ​கா​ரங்​களுக்கான அமைச்​ச​கத்​தின் செய​லாளர் மோகன்​தாஸ் தெரி​வித்​துள்ளார்.

அவர் கூறுகையில், வளை​குடா நாடு​க​ளில் வேலை இழந்து,​ வாழ்​வா​தா​ரத்​துக்கு வழி தெரி​யா​மல் தவிக்​கும் நடுத்​தர வர்க்​கத் தொழி​லா​ளர்​க​ளின் மறு​வாழ்​வுக்​காக சிறப்பு நிதி​யம் ஏற்​ப​டுத்​தப்​ப​டும். இதற்​கான நடை​மு​றை​களை மத்​திய அரசு வகுத்து வரு​கி​றது என்றார்.

துபா​யில் வசித்து வரும் இந்​தி​யர்​கள் மூலம்,​ அன்​னி​யச் செலா​வ​ணி​யாக கடந்த 2007ம் ஆண்​டில் 2,700 கோடி அமெ​ரிக்க டாலர்​களை இந்​தியா பெற்​றது குறிப்பிடத்தக்கது. துபாயி​லி​ருந்து அதிக அள​வில் அன்​னி​யச் செலா​வ​ணியை ஈட்டும் நாடு​க​ளில் இந்​தியா முத​லி​டத்தில் உள்ளது.

துபாய் உள்ளிட்ட ஐக்​கிய அரபு நாடு​க​ளில் சுமார் 20 லட்​சம் இந்​தி​யர்​கள் பணியாற்றி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X