அரபு நாடுகளில் வேலை இழந்து திரும்பும் இந்தியர்களுக்கு உதவ சிறப்பு நிதியம்

ஐக்கிய அரபு நாடுகளில் முக்கியமான துபாய் கடன்
நெருக்கடி வலையில் சிக்கியுள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
குறிப்பாக ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில்துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் துறைகளில் பணியில் உள்ள ஏராளமான இந்தியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த நெருக்கடியால் வேலையை இழந்து தாயகம் திரும்பும் இந்தியர்களின் மறுவாழ்வுக்கு உதவ மத்திய அரசு விரிவான திட்டத்தை வகுத்து வருகிறது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்களின் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலாளர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வளைகுடா நாடுகளில் வேலை இழந்து, வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்கத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு நிதியம் ஏற்படுத்தப்படும். இதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது என்றார்.
துபாயில் வசித்து வரும் இந்தியர்கள் மூலம், அன்னியச் செலாவணியாக கடந்த 2007ம் ஆண்டில் 2,700 கோடி அமெரிக்க டாலர்களை இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது. துபாயிலிருந்து அதிக அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications