இமெயில், எஸ்எம்எஸ் மிரட்டலையும் தாண்டி இன்னும் கலக்கும் கடிதப் போக்குவரத்து

அது ஒரு காலம். வெளியூருக்குப் போனால் நமது குடும்பத்தினருக்கு ஒரு இன்லேன்ட் லெட்டரையோ அல்லது தபால் அட்டையையோ வாங்கி அன்புள்ள அப்பாவுக்கு, நான் நலம், அது போல நீங்களும், அம்மா, அக்கா, அண்ணன், தங்கை, அப்பத்தா உள்ளிட்டோர் நலமா என்று ஆரம்பித்து மனதில் தோன்றியதையெல்லாம் எழுதி உதட்டு எச்சிலால் கடிதத்தின் பசைப் பகுதியை தடவி, அதை மூடி, நெஞ்சோடு சில விநாடிகள் வைத்திருந்து பின்னர் தபால் பெட்டியில் போட்டு விட்டு நிம்மதியாக திரும்பிய காலம் அது.
இப்போது அந்தப் பழக்கம் நிறையப் பேரிடம் இல்லாமல் போய் விட்டது. எந்த ஊராக இருந்தாலும் சரி, அல்லது எந்த நாடாக இருந்தாலும் சரி, அம்மாவுடனோ, அப்பாவுடனோ பேச விரும்பினால் செல்லை எடுத்து நம்பரைப் போட்டு டக் டக்டென நாலு வார்த்தைகளில் பேசி விட்டு வைத்து விடலாம்.
ஏதாவது செய்தி தெரிவிக்க வேண்டுமா, கம்ப்யூட்டரில் ஒரு கண்ணும், கைவிரல்களில் டைப்பிங்குமாக மெசேஜ் அனுப்பி வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய் விடலாம். இன்று உணர்வுகள் குறைந்து விட்டது, மெஷின் மயமாகி விட்டது.
என்னதான் எஸ்.எம்.எஸ்.அனுப்பினாலும், இமெயில் அனுப்பினாலும், ஒரு இன்லேன்ட் லெட்டர் ஏற்படுத்தும் உணர்வுத் தாக்கத்தை மிஞ்ச இதுவரை எதுவுமே இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம்.
இப்படி பழங்கதையாகிப் போனாலும் கூட கடிதம் அனுப்புவது இன்றளவும் சுறுசுறுப்பாகவே இருப்பதாக தபால்துறை கூறுகிறது. தினசரி தமிழகத்தில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறதாம். இதை இந்த ஆண்டு 20 சதவீத அளவுக்கு அதிகரிக்க தபால் துறை திட்டமிட்டுள்ளதாம்.
இதுகுறித்து தமிழ்நாடு தபால்துறையின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சாந்தி நாயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டு எங்களுடைய மொத்த கடிதப் போக்குவரத்து 26.5 லட்சமாக இருந்தது. சென்னையில் மட்டும் 10 லட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்பட்டன.
இந்த ஆண்டு கடிதப் போக்குவரத்தை 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.
எங்களுடைய தபால் போக்குவரத்தில் தபால் கார்டுகள், இன்லேன்ட் கடிதங்கள், கவர்கள், வாழ்த்து உள்ளிட்டவை அடங்கும்.
இளம் தலைமுறையினரிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்த இந்த ஆண்டு கடிதம் எழுதும் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. அதை இளம் தலைமுறையினர் மறந்து விடக் கூடாது.
உலக தபால் தினம் வருகிற அக்டோபர் மாதம் வருகிறது. அதைக் கொண்டாடும் வகையில், மாநிலம் முழுவதும் கடிதம் எழுதும் போட்டியை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications