மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது-தலைமை தேர்தல் ஆணையர்
திருவனந்தபுரம்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.
மத்திய தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி நேற்று திருவனந்தபுரம் வந்தார். அடுத்த வருடம் கேரளாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கேரளாவில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் தயாராகிவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வி்ட்டது.
ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்பும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு உடனடியாக வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
மின்னணு வாக்கு பதிவு எந்திரம் நம்பகத்தன்மை கொண்டதாகும். இதில் எந்த முறைகேடும் செய்ய முடியாது. கேரளாவில் அடுத்த வருடம் மே மாதம் தேர்தல் நடைபெறும் என்றார்.
இதற்கிடையே, கேரளாவில் தேர்தல் கமிஷன் சார்பில் கால் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. 04713912344 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வாக்காளர்களுக்கு தேவையான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications