காங். கூட்டணியில் இடம் பெற்றுள்ள மமதாதான் மாவோயிஸ்ட் ஆதரவாளர்-கருணாநிதிக்கு எச்சூரி பதிலடி

மாவோயிஸ்ட் நக்சலைட் வன்முறையை தமிழகத்தில் பரப்ப முயலுகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கடுமையாக சாடியிருந்தார் முதல்வர் கருணாநிதி. இதற்கு எச்சூரி சேலத்தில் பதிலளித்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மூத்த அரசியல்வாதியான தமிழக முதல்வர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்பதுபோல் கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. சமூக மாற்றத்தை உருவாக்க தற்போதைய ஜனநாயக முறையில் நம்பிக்கை இல்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள்தான் மாவோயிஸ்டுகள்.
எங்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாட்டை அறியாதவராக முதல்வர் பேசியிருக்கிறார். கடந்த 1967-ல் இருந்து வன்முறையை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புமாறு மாவோயிஸ்டுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மேற்கு வங்கத்தின் எல்லையோரப் பகுதிகளில் இப்போது உள்ள மாவோயிஸ்டுகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் இறக்குமதி செய்யப்பட்டவர்கள். இக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை எதிர்த்துப் பேசியதுடன் அவர்களைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறார். அவர் இடம் பெற்றுள்ள மத்திய அரசில்தான் தி.மு.க.வும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு ஒத்துவராத, வன்முறைப் பாதையில் இருந்து விலகி வரும் மாவோயிஸ்டுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்படுவோம். நேபாளத்தில் வன்முறை அரசியலை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு வந்ததால்தான் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆதரித்தோம். இதை முதல்வர் அறிந்து கொள்ளாமல் பேசியிருக்கிறார்.
மாவோயிஸ்டுகளை தடை செய்ய நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவது மாநில அரசின் கடமையாக உள்ள நிலையில் கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மார்க்சிஸ்ட் ஆளும் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதை அவர் அறிய வேண்டும். எனவே எங்களை மாவோயிஸ்டுகளுடன் தொடர்புபடுத்தி அவர் பேசியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
மாவோயிஸ்டுகள் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால் அவரது அமைச்சரவையில் இருப்பவரே மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார். இதை பிரதமர் எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்று தெரியவில்லை. இது குறித்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரிமை பிரச்னை எழுப்ப இருக்கிறோம் என்றார் எச்சூரி.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications