For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர்க்குற்ற விசாரணை: ஐநா குழுவை அனுமதிப்பது குறித்து இலங்கை பரிசீலனை!

Google Oneindia Tamil News

War Crimne
கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதியுத்தத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐநா குழுவை அனுமதிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த குழுவை அனுப்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறியதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

தங்கள் நாட்டு உள்விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்று காட்டமாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இலங்கையின் நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா வலியுறுத்தல்

இந்த நிலையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச தரத்திலான விசாரணை அவசியம் என்றும், ஒருவேளை ஐநா விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அவற்றை அமெரிக்கா கண்காணிக்க வேண்டும் என்றும் அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
The Sri Lankan govt today announced its consideration to allow the UNO Probe commission on war crimes took place in the last battle between SLA - LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X