லஷ்கர் இ தொய்பா தாக்குதல் அபாயம்-கர்நாடகத்தில் உச்சகட்ட உஷார் நிலை

குறிப்பாக கர்நாடக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் லஷ்கர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக நாடு தழுவிய எச்சரிக்கைத் தகவலையும் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
மும்பை, அகமதாபாத், கோவா, பெங்களூர் நகரங்கள் தீவிரவாதிகளின் பட்டியலில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மும்பைக்குள் நான்கு லஷ்கர் தீவிரவாதிகள் ஊடுறுவியருப்பதாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்புத் தகவல் வெளியானது. அவர்களது புகைப்படங்கள், பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களைத் தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து பெங்களூர் முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ள மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாகலாம் என்று அஞ்சப்படுவதால் அவற்றுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பையில் வீடு வீடாக தேடும் பணிகளை பாதுகாப்புப் படையினர் முடுக்கி விட்டுள்ளனர். கடற்படையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கமாண்டோப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்திலும் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பெங்களூரில் மத்திய அரசு அனுப்பிய 550 பேர் கொண்ட புற ராணுவப்படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போலீஸார் முழு விழிப்புணர்வுடன் வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுறுவியதாக இதுவரை தகவல் இல்லை. இருப்பினும் அனைத்துப் பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், முக்கிய கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேர கண்காணிப்பை கர்நாடக போலீஸார் மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளனர். வாகனத் தணிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கெய்கா அணு மின் நிலையம், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை முழு அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. எந்தவித சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் கர்நாடக காவல்துறையும், அரசும் உள்ளது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications