பெண்கள் வெளியே வர அஞ்சும் நிலை-ஜெயலலிதா சொல்கிறார்

அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கழிவு நீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், குப்பைகள் அள்ளப்படாததன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்படும் சூழ்நிலை நிலவுவதாகவும், தெரு விளக்குகள் எரிவதில்லை என்றும், பிறப்பு, இறப்பு சான்றுகள் கூட பெற முடியாத அவல நிலை நிலவுவதாகவும், நகராட்சி ஆணையர் பணியிடம் நிரப்பப்படாததன் காரணமாக புகார்கள் கூட கொடுக்க முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைப்படுகின்றனர்.
இது மட்டுமல்லாமல், ஆதி திராவிட மக்களுக்கு இது நாள் வரை பட்டா வழங்கப்படவில்லை என்றும், இரட்டை கண் வாராபதியில் இரண்டு அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றும், அரசு பொது மருத்துவமனை எந்தவித அடிப்படை வசதியுமின்றி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், ஆட்டுப்பாக்கம், தக்கோலம், மூதூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் களிமண் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்ப்பதாகவும், நெமிலி ஒன்றியத்தில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், பள்ளூர்- திருமால்பூர் நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் போதிய பேருந்து வசதி செய்து தரப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
இதே போன்று, காவேரிப்பாக்கம் ஒன்றியத்திலும் எந்தவிதமான அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை.
கடுமையான மின்வெட்டு காரணமாக நெசவுத்தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், நிர்வாகத்திற்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
பண மோசடி, நில மோசடி, கொலை, கொள்ளை ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், பட்டப்பகலில் கூட பெண்கள் வெளியே வர அஞ்சுகின்ற அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சீரழிந்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தி வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாளை அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications