சட்டசபை தேர்தல்-அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு
நெல்லை: சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உத்தேச பட்டியலை விரைவில் அனுப்பி வைக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் குரேஷி அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சட்டப்பேரவைதேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
தேர்தல் பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்படும். ஓட்டுபதிவு செய்வது முதல் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் பயிற்சியின் போது உயர் அலுவலர்களால் விளக்கப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை வாக்குபதிவு அலுவலர், வாக்குபதிவு அலுவலர் நிலை 1,2,3,4 ஆகிய 5 அலுவலர்கள் பணியாற்றுவர்.
இவர்களைத் தவிர வாக்குச்சாவடிகளை கண்காணிக்க மண்டல அலுவலர்களும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க மைக்ரோ அப்சர்வர்களாக மத்திய அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
தேர்தல் பணிக்கு 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள் பட்டியலை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications