மார்ச் 15 முதல் ஜெ.பிரசாரம்-வேனிலேயே பயணம், ஹெலிகாப்டர் இல்லை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்குத் தயாராகி விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. வருகிற 15ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கும் அவர் 28 நாட்களுக்கு பட்டி தொட்டியெங்கும் சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். கடந்த லோக்சபா தேர்தலின் போது ஹெலிகாப்டரில் பறந்த பறந்து பிரசாரம் செய்த ஜெயலலிதா இந்த முறை முழுக்க முழுக்க வேனிலேயே சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
அதிமுக தரப்பில் தேர்தல் தொடர்பாக நடந்து வரும் பணிகள் முழுமையாக தெரியாவிட்டாலும் கூட நடக்க வேண்டியவை அந்தந்த நேரத்தில் நடந்து வருகிறது. தொகுதிப் பங்கீட்டை அரைகுறையாக முடித்து வைத்துள்ள ஜெயலலிதா, தொகுதிகளை ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இடையே அதிமுகவினரிடம் நேர்காணலிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் பிரசாரத்திற்கும் அவர் தயாராகி விட்டார்.
வருகிற 15ம் தேதி முதல் அவர் தீவிரப் பிரசாரத்தில் குதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம் போல சென்னையிலிருந்து பிரசாரத்தைத் தொடரவுள்ளார் ஜெயலலிதா. சைதாப்பேட்டை, பல்லாவரம் தொகுதிகளில் அவர் பிரசாரத்தை தொடங்கி அப்படியே காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக தொடரவுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் ஹெலிகாப்டர் மூலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வேனிலேயே பிரசராம் செய்யவுள்ளார் ஜெயலலிதா. இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய வேன் தயாராகி விட்டது.
கிராமம் கிராமாக சென்று வேனில் உட்கார்ந்தபடியே பேசவுள்ளார் ஜெயலலிதா. முக்கிய நகரங்களில் மட்டும் கூட்டங்களில் பேசுகிறார். ஸ்பெக்ட்ரம் பிரச்சினை, விலைவாசி உயர்வு, ஊழல் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
வழக்கமாக தேர்தல் பிரசாரத்தின் நிறைவாக ஏதாவது ஒரு முக்கிய நகரத்தில் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் பிரமாண்டக் கூட்டம் நடைபெறும். ஆனால் இம்முறை அது இடம் பெறாது என்று தெரிகிறது. இருப்பினும் கடைசி பிரசார நாளில் விஜயகாந்த் உள்ளிட்டோருடன் ஜெயலலிதாவை மேடையேற்ற வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications