14ம் தேதி குரேஷி வருகை: அனைத்து கட்சியினருடன் சந்திப்பு
சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி வரும் 14-ம் தேதி சென்னை வருகிறார். அவர் அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசவிருக்கிறார். அவருடன் 2 தேர்தல் ஆணையர்களும் வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்தது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி வரும் 14-ம் தேதி சென்னை வருகிறார். அவருடன் இன்னும் 2 தேர்தல் ஆணையர்கள் வருகின்றனர். அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல், தேர்தல் விதிமுறைகள் குறித்து பேசுகிறார். அப்போது தேர்தல் விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார். மேலும், அவர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நிருபர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடம் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது வாக்குச்சாவடியில் உள்ள கேமரா மூலம் கண்டறியப்படும் என்று மிரட்டுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
வாக்குச்சாவடிகளில் நிகழ்வுகளை கண்காணிக்க மட்டுமே கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை அறிய முடியாது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்.
பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் அதிகபட்சம் 10 வாகனங்களுடன் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலத்துக்கு செல்லும்போது, அதிகபட்சமாக 5 பேரை அழைத்து வரலாம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications