சட்டசபை தேர்தல் பணி: வீடியோ கேமிராமேன்கள் தேர்வு பணி தீவிரம்
நெல்லை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை வீடியோ பதிவு செய்யும் வகையில் கேமராமேன்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஓட்டு பதிவின்போது முறைகேடுகள எதுவும் நடக்காத வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு தேர்தல் பார்வையாளர், 5 தொகுதிகளுக்கு ஒரு கணக்கு தேர்தல் பார்வையாளர் விரைவில் அந்தந்த மாவட்டத்துக்கு செல்கின்றனர். இவர்களுடன் வீடியோ கேமராமேன்களும் செல்கி்ன்றனர்.
மேலும் பதட்டமான வாக்குச் சாவடிகளில் காலை முதல் மாலை வரை ஓட்டுப் பதிவை வீடியோ எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வீடியோ கேமராமேன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தற்போது முதல்கட்டமாக தேர்தல் விதிமுறைகள் மீறல், தேர்தல் பார்வையாளர் ஆய்வு போன்றவற்றுக்காக வீடியோ கேமராமேன்கள் தேர்வு செய்ய்ப்படுகின்றர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்டமாக 300க்கும் மேற்பட்ட வீடியோ கேமராமேன்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒவ்வொரு கேமராமேன் பெயர், முகவரி, வீடியோ எடுக்க வேண்டிய பகுதி உள்பட பல்வேறு விபரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஓரிரு நாட்களில் இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணியைத் துவங்குவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications