சட்டசபை தேர்தல் பணி: வீடியோ கேமிராமேன்கள் தேர்வு பணி தீவிரம்
நெல்லை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை வீடியோ பதிவு செய்யும் வகையில் கேமராமேன்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஓட்டு பதிவின்போது முறைகேடுகள எதுவும் நடக்காத வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு தேர்தல் பார்வையாளர், 5 தொகுதிகளுக்கு ஒரு கணக்கு தேர்தல் பார்வையாளர் விரைவில் அந்தந்த மாவட்டத்துக்கு செல்கின்றனர். இவர்களுடன் வீடியோ கேமராமேன்களும் செல்கி்ன்றனர்.
மேலும் பதட்டமான வாக்குச் சாவடிகளில் காலை முதல் மாலை வரை ஓட்டுப் பதிவை வீடியோ எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வீடியோ கேமராமேன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தற்போது முதல்கட்டமாக தேர்தல் விதிமுறைகள் மீறல், தேர்தல் பார்வையாளர் ஆய்வு போன்றவற்றுக்காக வீடியோ கேமராமேன்கள் தேர்வு செய்ய்ப்படுகின்றர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்டமாக 300க்கும் மேற்பட்ட வீடியோ கேமராமேன்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒவ்வொரு கேமராமேன் பெயர், முகவரி, வீடியோ எடுக்க வேண்டிய பகுதி உள்பட பல்வேறு விபரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஓரிரு நாட்களில் இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணியைத் துவங்குவர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications