ஹசன் அலியின் ஜாமீன் ரத்து... 4 நாட்கள் போலீஸ் காவல்!
Subscribe to Oneindia Tamil

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கிய வழக்கில், புனேவை சேர்ந்த பண்ணை அதிபர் ஹசன் அலி, கடந்த 7-ந் தேதி, அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவு அனுமதி கோரியபோது, அதை ஏற்க மறுத்த மும்பை செசன்சு நீதிமன்ற நீதிபதி தகலியானி, ஹசன் அலியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஹசன் அலிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது. அவரை 4 நாள் அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.












Click it and Unblock the Notifications