கூடுதல் கட்டணம்... துரைமுருகன் நடத்தும் கல்லூரிகள் மீது புகார்!

தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில் டெல்லி பாபு (மார்க்சிஸ்டு கம்யூ) பேசும்போது, வேலூரில் துரைமுருகன் நடத்தி வரும் என்ஜினீயரிங் கல்லூரியிலும் 92 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்கிறார்கள் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், "தமிழ்நாட்டில் 464 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கடந்த 1992-ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சுயநிதி கல்லூரிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிக்கும் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே இந்த கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தற்போது 50 பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் வரை 14 பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்து உள்ளது.
வேலூரில் துரைமுருகன் நடத்தி வரும் பொறியியல் கல்லூரி மீதும் புகார் வந்துள்ளது. கடந்த ஆட்சியில் பெரும்பாலான அமைச்சர்கள் சேவை மனப்பான்மை இல்லாமல் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கினர். தற்போது வந்துள்ள புகாரின் அடிப்படையில் எல்லா கல்லூரிகளிலும் ஆய்வு செய்வோம். அதிக கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
11 கல்லூரிகளில் முதல் தலைமுறை மாணவர்களிடமும் பணம் வசூலித்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முதல் தலைமுறையினரிடம் வசூலித்த பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்," என்றார்.
சுகாதாரதுறை அமைச்சர் விஜய் கூறுகையில், "தமிழ்நாட்டில் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அதிகபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் கல்வி கட்டணம், கணினி, நூலகம், ஆய்வக கட்டணம் என அனைத்தும் அடங்கும்.
எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது புகார்கள் வந்தால் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். ஆனால் இதுவரை எந்த புகாரும் வரவில்லை," என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications