ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து தனி விசாரணை: பாக். கிரிக்கெட் வாரியம் முடிவு
லாகூர்: ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தண்டனை விதிக்கப்பட்ட 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு சூதாட்டத்தில் இருந்த தொடர்பு குறித்து விசாரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சாகா அஷ்ரப் கூறியதாவது, பாகிஸ்தான் அணியின் ஊழல் தடுப்புக் குழு இங்கிலாந்தில் இருந்த போது பாகிஸ்தான் வீரர்கள் எப்படி சூதாட்த்தில் ஈடுபட்டார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் தற்போது, ஊழல் தடுப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுப்பது தவறு. லண்டன் நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் வெளியான பிறகு விசாரணை துவங்கும். இந்த வழக்கு தொடர்பான காரணம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை குறித்து முதலில் விசாரிக்க வேண்டியுள்ளது.
கிரிக்கெட் ஊழலுக்கு எதிராக போராடும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முழு ஆதரவை அளிக்கும் என்பதை தெரிவிக்கும் கடிதத்தை விரைவில் அனுப்பப்படும், என்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பு ஏற்பட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் அதிகாரிகளும் ஒரு காரணம் என முன்னாள் வீரர்கள் குற்றசாட்டியுள்ளனர். கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் உதவியுடன் சூதாட்ட புரோக்கர் மசார் மஜீத், பாகிஸ்தான் வீரர்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மோயின் கான் கூறியதாவது, சூதாட்டம் நடந்த போது ஊழல் தடுப்பு குழுவினர் என்ன செய்து கொண்டிருந்தனர் என தெரியவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் மசார் மஜீத் தங்குவதற்கு அந்த குழுவினர் தடுக்கவில்லை, என்றார்.
சூதாட்ட புரோக்கர் மசார் மஜீத்துக்கு மற்ற பாகிஸ்தான் பாகிஸ்தான் வீரர்களுடன் தொடர்பு இருக்கலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்தேகப்படுவதாக தெரிகிறது.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications