போர்க் குற்றங்கள்- கொலைகள்: சர்வதேச விசாரணை இல்லை- இலங்கை திட்டவட்ட அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது ராணுவம் செய்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந் நாட்டு அரது திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் இதனைத் தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை மீதான விவாதத்தில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பியான சம்பந்தன், போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பெரீஸ், இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. இதனால் எந்த வெளி நாட்டின் தலையீடுகளுக்கும் அரசாங்கம் அடிபணியாது.
இலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் உள்நாட்டு விவகாரம். இதில் எந்த ஒரு அன்னிய நாடும் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம்.
இத்தகைய விசாரணைகள், மக்களுக்கு மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும், சம்பந்தன் யாருக்காக வாதாடுகிறாரோ அந்த மக்கள்தான் (தமிழர்கள்) அசௌகரியத்திற்குள்ளாவர்.
இதனால் இந்த விவகாரத்தில் சர்வதேச போலீஸ் விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது அப்பாவி மக்களை கொன்று குவித்து மனித உரிமையை ராணுவம் மீறியதாக ஐ.நா. குழு குற்றம் சுமத்தியுள்ளதும், இது குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மீது பான் கீ மூன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications