உயிரைக் குடிக்கும் பழவேற்காடு ஏரி-ஏற்கனவே 15 பேரை காவு வாங்கியுள்ளது
திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதும், விபத்து ஏற்படுவதும் புதிதல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர் கதையாக மாறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றபோது 15 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பழவேற்காடு ஏரியான, கடலுடன் போய் முடிகிற இடத்தில் இருப்பதால் இந்த ஏரிக்கு வருவதற்கு பலரும் ஆசைப்படுகின்றனர். ஆனால் இங்கு படகுப் பயணமானது ஒரு குறிப்பிட்ட தூரம் வரைக்கும்தான் பாதுகாப்பானது. அதற்குப் பின்னர் உயிருக்கு உத்தரவாதமில்லை.
ஆனால் படகோட்டிகள் பலர் பணத்திற்கு ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்று விபத்தில் சிக்கி விடுகின்றனர். வழக்கமாக 10 பேர் வரை படகில் ஏற்றுவதுண்டு. இது நல்ல மனம் படைத்த மீனவர்களின் வழக்கம். அதற்கு மேல் ஆட்களை ஏற்ற மாட்டார்கள். ஆனால் சிலர் என்ன செய்வார்கள் என்றால் 20 பேருக்கும் மேல் ஏற்றிச் செல்கிறார்கள். இது அபாயகரமானது. படகு பாரம் தாங்க முடியாமல் ஏரியில் செல்லும்போது கரையில் இருக்கும் நாங்கள் திகிலுடன் பார்த்தபடி இருப்போம் என்கிறார்கள் அங்குள்ள சில மீனவர்கள்.
அப்படித்தான் நேற்று 25 பேரை அழைத்துக் கொண்டு போய் விபத்தில் சிக்கியுள்ளனர். மேலும் நேற்று விபத்து நடந்த இடம் கிட்டத்தட்ட 30 அடி ஆழமான இடமாகும். நீச்சல் தெரியாத யாரும் நிச்சயம் உயிர் தப்ப முடியாது. நீச்சல் தெரிந்தவர்களே கூட சற்று கவனக்குறைவாக இருந்து விட்டால் உயிர் போய் விடும் என்கிறார்கள். காரணம், கடலும், ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் என்பதால் நிறைய நீர்ச் சுழல்களும் அப்பகுதியில் இருக்குமாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் கல்லூரி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் சென்று விபத்தில் சிக்கியது ஒரு படகு. அதில் இருந்த 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்கிறார்கள் அப்பகுதியினர்.
சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு என்ற இடமும்ம கூட முகத்துவாரப் பகுதிதான். அங்கு பாதுகாப்பான முறையில் அரசின் சுற்றுலாத்துறையே படகு சவாரியை சிறப்பாக நடத்தி வருகிறது. அதேபோல பழவேற்காட்டிலும் அரசே படகு சவாரியை நடத்தினால் இந்தப் பிரச்சினையே வராது என்கிறார்கள் பொதுமக்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications