இங்கிலாந்து, பிரான்சுக்கான எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்: ஈரான்
பொருளாதாரத் தடை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்ததற்கு பதிலடியாக ஈரான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈரான் எண்ணெய்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜூலை 1-ந் தேதி முதல் இத்தடை முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சு, இங்கிலாந்து நாடுகளுக்குப் பதில் வேறு நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதிசெய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த முடிவு மிகப்பெரிய எதிர்விளைவு ஏற்படுத்தாது. ஏனெனில் பிரான்சு கடந்த ஆண்டு தமது இறக்குமதியில் 3 விழுக்காட்டை மட்டுமே ஈரானில் இருந்து பெற்றது. இங்கிலாந்தும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை.
இருப்பினும் எண்ணெய்க்காக ஈரானை அதிகம் சார்ந்திருக்கும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை இது.