சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழு!

ஈழப் போர் முடிந்து இத்தனை வருடங்களாகியும் தமிழர்களுக்கு இன்னும் விமோச்சனம் கிடைக்கவில்லை. முள்வேலிக்குள் அகதிகளாக தள்ளப்பட்ட மண்ணின் மைந்தர்களான தமிழர்களை ஆடு மாடுகளை விட மிகவும் கேவலமாக நடத்தி வருகிறது சிங்கள அரசு. சற்றும் மனிதாபிமானமோ, மனித நேயமோ இல்லாமல் கொடுமையான சூழலிலேயே வைத்துள்ளது இலங்கை அரசு.
இந்த நிலையில்தான் சமீபத்தில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. அது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு இந்திய எம்.பிக்கள் குழு நேரில் செல்கிறது. ஏற்கனவே இந்தக் குழு கடந்த பிப்ரவரியே போயிருக்க வேண்டியது. இடையில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறுக்கிட்டதால் போக முடியவில்லை.
தற்போது இவர்கள் அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ளனர். இதை சுஷ்மா சுவராஜே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். இந்த குழுவினர் அடுத்த மாதம் 16-ந் தேதி புறப்பட்டு செல்கிறார்கள். 21-ந்தேதி திரும்புகிறோம். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை எம்.பி.க்கள் பார்வையிடுகிறார்கள். தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கிறோம்.
பாஜக சார்பில் எம்.பிக்கள் பிரகலாத் ஜோஷி, வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுகிறார்கள். எம்.பி.க்கள் குழுவின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் செய்து வருகிறார் என்றார்.
இந்தக் குழுவில் தமிழகத்திலிருந்து யார் கலந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications