அமெரிக்காவின் கலிபோர்னியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் எஸ்.ஜே.இம்மானுவல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்பு ஈழத் தமிழர்களின் அரசியல் பங்களிப்பு குறித்து கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றது.
அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கைக் கவுன்சில் தலைவர் எலியஸ் ஜெயராஜ், சான்ஜோஸ் நகரசபை உறுப்பினர் ஆஷ் கார்லா ,அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதி மைக் ஹோண்டாஸ் , ருவாண்டா மக்களின் பிரதிநிதி வின்சென்ட் முகாபோ, ஆர்மேனிய மக்கள் பிரதிநிதி மற்றும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications