குஜராத் கலவரத்தையடுத்து மோடியை பதவி நீக்க வாஜ்பாய் திட்டமிட்டார்: நிதிஷ்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இப்போதே தெரிவிக்க வேண்டும், நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தக் கூடாது, மதசார்பற்ற ஒருவர் தான் பிரதமராக வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிபந்தனை விதித்துள்ளார் அந்தக் கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ்குமார்.
இதையடுத்து நிதிஷ்குமாருக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைமையும் நிதிஷ்குமாரை கண்டித்துள்ளது.
மதசார்பின்மை பற்றி பேசும் நிதிஷ்குமார், குஜராத் கலவரம் நடந்தபோது வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது அவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்றும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடிக்கு எதிராக மீண்டும் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார் நிதிஷ்குமார். அவர் கூறுகையில், மதசார்பற்ற தலைவர் ஒருவர் தான் பிரதமராக வேண்டும். அது தான் என் இறுதி முடிவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. நரேந்திர மோடியை பாஜக பிரதமராக முன் நிறுத்துவதை ஏற்க முடியாது.
குஜராத் கலவரத்தை நரேந்திர மோடி கையாண்ட விதத்தை வாஜ்பாயே ஏற்கவில்லை. அவரை பதவி நீக்கம் செய்ய வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.
2004ம் ஆண்டில் பாஜக மத்தியில் ஆட்சியை இழந்ததற்குக் காரணமே குஜராத் கலவரமும் அதை மோடி கையாண்ட விதமும் தான். அந்தக் கலவரத்தின்போது ராஜ தர்மத்தைக் காக்க மோடி தவறிவிட்டார் என்றார்.
இதன்மூலம் மோடியை வாஜ்பாயே ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார் நிதிஷ்குமார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications