பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் இன்றும் சசிகலா ஆப்செண்ட்- கைது வாரண்ட் பிறப்பிப்பு?

தமிழக முதல்வராக 1991 முதல் 1996ம் ஆண்டுவரை முதல்வர் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சசிகலாவிடம் நீதிமன்றத்தால் அவ்வளவு எளிதாக வாக்குமூலம் பெற்றுவிட முடியவில்லை. மாதக் கணக்கில் பல்வேறு காரணங்களைக் கூறி சசிகலா இழுத்தடித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக கண்ணில் பிரச்சனை என்று கூறி நீதிமன்றத்தில் ஆஜராகமலேயே இருந்து வந்தார். கடந்த முறை விசாரணையின் சசிகலா கண்டிப்பாக இன்றைய விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்றும் அவர் ஆஜராகமல் போனால் இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இன்றைய விசாரணையின் போது சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருமே ஆஜராகததால் நீதிபதி மல்லிகார்ஜூனையா செம கடுப்படைந்தார். இவ்வளவுதூரம் எச்சரித்தும் மூவருமே ஒட்டுமொத்தமாக ஆஜராகததால் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார் நீதிபதி.
மூவராலும் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என்றும் வழக்கின் விசாரணையை 10 நாட்கள் வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மூவர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜூனையா முறைப்படியாக நியமிக்கப்படவில்லை என்று புதிய மனு ஒன்றை சசிகலா தரப்பில் தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வகை செய்யும் வகையில் கைது வாரண்ட்டை நீதிபதி பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக பெங்களூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications