200 ஆண்டு பழமை வாய்ந்த தஸ்தகீர் சாகிப் தர்கா தீ: ஸ்ரீநகரில் ஊரடங்குச் சட்டம்?
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் வரலாற்று சிறப்புமிக்க தஸ்தகீர் சாஹிப் தர்காவில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகரில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தஸ்தகீர் சாஹிப் தர்கா உள்ளது. அங்கு தான் புனிதர் கவுஸ் இ ஆசாம் அடங்கியுள்ளார். அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான இந்த தர்காவில் இன்று காலை 6.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ ஆக்ரோஷத்துடன் கொழுந்துவிட்டு எரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். அந்த தர்காவில் அடங்கியுள்ள கவுஸ் இ ஆசாமின் நினைவுச் சின்னங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. தர்கா மரத்தால் ஆனது என்பதால் முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணீர் விட்டனர். தீயணைப்புத் துறையினரின் மெத்தனத்தால் தான் தர்கா முழுவதும் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறி அவர்கள் மீது உள்ளூர்வாசிகள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தர்கா அமைந்திருக்கும் கன்யார் பகுதி காவல் நிலையத்தையும் கற்கள் வீசித் தாக்கினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும் போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.
அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை போலீஸ் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications