வக்பு வாரிய உறுப்பினர் விவகாரம்: அமைச்சர் முகம்மது ஜானுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: வக்பு வாரிய உறுப்பினர் குறித்த விவகாரத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான், அரசுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
வக்பு வாரியம், கோடிக்கணக்கான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதற்கான உறுப்பினர்களாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான், எம்.எல்.ஏ. அப்துல்ரகீம், எம்.பி.க்கள் ஆரோன் ரஷீத், அமீர் அலி ஜின்னா மற்றும் தமிழ்மகன் உசேன், பாரூக், தலைமை ஹாஜி (சன்னி) சலாஹுதீன் அப், தலைமை ஹாஜி மெஹ்திகான் ஆகிய 8 பேரை நியமித்து 15.6.12 அன்று தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நியமனத்தில் விதிமுறைகளைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சரியாகப் பின்பற்றவில்லை. இதனால் தகுதியில்லாதவர் கூட உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாமல் உறுப்பினர்களை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கான பதில் மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறு அமைச்சர் முகம்மது ஜான், அரசுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications