ஸ்ருதி வழக்கை தொடர்ந்து கண்காணிப்போம்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ருதி விவகாரத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளைத இன்று உயர்நீதிமன்ற விசாரணை வெளிப்படுத்தியது. அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணனிடம் இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
தலைமை நீதிபதி தனது உத்தரவின்போது கூறுகையில், செய்தித் தாள்களில் சில நாட்களில் இந்த செய்தி அப்படியே மறைந்து போய் விடும். மக்களும் கூட மறந்து விட்டு அடுத்த வேலைக்குப் போய் விடுவார்கள். ஆனால் நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். தொடர்ந்து இந்த வழக்கை நேரடியாக கண்காணிக்கப் போகிறோம்.
இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் அரசின் நடவடிக்கைகள், கல்வித்துறையின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அதை நாங்கள் கண்காணித்து வருவோம் என்றார்.
பின்னர் அரசு தலைமை வழக்கறிஞரிடம், பள்ளிக்கூடத்தை மூடுவது குறித்து கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதே,அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டார் தலைமை நீதிபதி. அதற்கு பள்ளித் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில்,இப்போது ஸ்ருதி படித்த பள்ளிக்கூடத்தை மூடினால், மற்ற மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துரைத்தார்.
இதையடுத்து இன்னும் 2 வாரத்திற்கு பள்ளியை மூடுவது தொடர்பான முடிவை எடுக்கத் தேவையில்லை. அதுகுறித்து பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications