ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: குற்றவாளிகளை கைது செய்ய ஞானதேசிகன் கோரிக்கை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகர்கோவில் அருகே மணக்குடியில் ஊராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் சிமெண்ட்டாலான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியி்ன் சிலை உள்ளது. இந்த சிலையை கடந்த 1992ம் ஆண்டு மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் இந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்துவிட்டனர்.
சிலை சேதமடைந்து கிடந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு திரண்டு இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மணக்குடி காங்கிரஸ் தலைவர் நர்சீசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலையை உடைத்தவர்கள் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாகர்கோவில் மணக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு உள்ள ராஜீவ் காந்தியின் சிலை சில விஷமிகளால் உடைக்கப்பட்ட நிகழ்வு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதற்கு காரணமானவர்களை காவல்துறை விரைந்து கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் என்று நம்புகிறேன்.
வன்முறை கலாச்சாரத்தை, அரசியல் ரீதியான வெறுப்புணர்வுகளை, இன உணர்வுகளை கிளப்பிவிடுகிற தீவிரவாத பேச்சுக்கள் தமிழகத்தில் அண்மைக் காலமாக தலையெடுத்து வருகிறது என்பதை எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications