பதவி உயர்வுகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு-சட்டம் வருகிறது

இத் தகவலை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எழுந்து, கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தலித்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தருவதாக மத்திய அரசு உறுதிமொழி தந்தது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தக் கூட்டத்தையே மத்திய அரசு கூட்டவில்லை.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்ட நிலையில், உடனடியாக பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை இயங்க விட மாட்டோம் என்றார்.
இதையடுத்து எழுந்த பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் நாராயணசாமி, இந்தக் கூட்டத் தொடரிலேயே இது தொடர்பான கூட்டத்தை பிரதமர் கூட்டி நல்ல முடிவை எடுப்பார் என்றார்.
ஆனால், இந்த பதிலால் திருப்தியடையாத பகுஜன் சமாஜ் எம்பிக்கள் அவையின் மையப் பகுதியில் கூடி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே பாஜக எம்பிக்கள் எழுந்து, முதலில் கறுப்புப் பண விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று கூறி, மாயாவதியின் கோரிக்கையை அமுக்க முயன்றனர்.
கறுப்புப் பணத்துக்கு எதிராக ராம்தேவ் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். எனவே முதலில் கறுப்புப் பணம் குறித்துப் பேச வேண்டும் என பாஜக எம்பிக்கள் ரவிசங்கர் பிரசாத், சாந்த குமார் ஆகியோர் கோரினர். இதையடுத்து பகுஜன் சமாஜ்- பாஜக எம்பிக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் அமளி நிலவியது.
இதையடுத்து அவையை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரி பிற்பகல் வரை ஒத்தி வைத்தார்.
21ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்:
இந் நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து வரும் 21ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, 22ம் தேதி நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications