'ரொமான்டிக்கை' விரும்பும் டெல்லிவாசிகள்; கடற்கரையை விரும்பும் மும்பைவாசிகள்!
மும்பை: கடற்கரை நகரங்களுக்குச் சென்று விடுமுறையை அனுபவிக்க மும்பைவாசிகள் விரும்புகின்றனர். அதே சமயம் துணையுடன் ரொமான்டிக்கான விடுமுறையை கொண்டாட டெல்லிவாசிகள் விரும்புகின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.
விடுமுறையை அனுபவிப்பது என்பது அனைவராலும் சரியாக செய்ய முடியாது. காரணம் சரியாக திட்டமிடல் இல்லாது, பணிச்சுமை போன்ற காரணங்களினால் உலக அளவில் பெரும்பாலான விடுமுறைகள் உபயோகிக்கபடாமல் காலவதியாகிவிடுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பியர்கள் ஆண்டுக்கு 25 முதல் 30 நாட்கள் வரை விடுமுறையை அனுபவிக்கின்றனர். ஆனால் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் மிகக்குறைந்த அளவிலான விடுமுறையை அனுபவிக்கின்றனர். இவ்வாறு விடுமுறையை சரியாக உபயோகிக்காமல் எப்பொழுது பார்த்தாலும் வேலை பற்றிய நினைப்பிலேயே காலம் தள்ளுவதால் மனஅழுத்தம் போன்ற நோய்களுக்கு அவர்கள் ஆளாக நேரிடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
விடுமுறையை எடுக்காமல் சேர்த்துவைத்து அதற்கான பணத்தை பெற்றுக்கொள்கின்றனர் டெல்லிவாசிகள். அதேசமயம் மும்பைவாசிகள் தங்களின் பயணத்தை சரியாக திட்டமிடாமல் விடுமுறை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது என்கிறது அந்த சர்வே.
கடந்த ஆண்டு உயரதிகாரிகளின் அப்ரூவல் இல்லாத காரணத்தால் டெல்லிவாசிகளால் சரியாக விடுமுறையை எடுக்க முடியாமல் போய்விட்டது. இந்த ஆண்டு 36 சதவிகிதம் பேர் சரியாக திட்டமிடாத காரணத்தினால் விடுமுறையை உபயோகிக்காமல் இருந்துள்ளனர். 37 சதவிகிதம் பேர் விடுமுறையை சேர்த்து வைத்து பணமாக மாற்றிக்கொள்வது தெரியவந்துள்ளது.
கடைசி நிமிட வேலைப்பணிகளினால் சிலர் விடுமுறைக் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளனர்.இந்திய நகரங்களில் உள்ளவர்கள் 32 சதவிகிதம் பேர் கடற்கரை நகரங்களில் விடுமுறையை கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ளனர். 33 சதவிகிதம் பேர் ரொமான்டிக் விடுமுறையை அனுபவிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். டெல்லிவாசிகள் 39 சதவிகிதம் பேர் காதல் விடுமுறைக்கும், மும்பைவாசிகள் 38 சதவிகிதம் பேர் கடற்கரை விடுமுறையை விரும்புவதாக கூறியுள்ளனர்.
ஆனால், சென்னைவாசிகளுக்கு எப்போ பார்த்தாலும் வேலை வேலை தான் போலிருக்கிறது!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications