தென்சீனக் கடலை உரிமை கோரி புதிய ‘மேப்’ வெளியிட்ட சீனா
Subscribe to Oneindia Tamil

1947-ம் ஆண்டு சீனாவின் தேசிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் புதிய யூ வடிவிலான மேப் என்று சீனா கூறியுள்ளது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தங்களிடம் முந்தைய கால வரைபடங்கள், வரலாற்று ஆவணங்கள் இருப்பதாகவும் அதன் மூலமே தென்சீனக் கடற்பரப்பு தங்களுக்கே உரித்தானது என்று உரிமை கோருவதாகவும் சீனா கூறியுள்ளது.
ஆனால் சீனா வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் மோதலை உருவாக்கியே தென்சீனக் கடல் பரப்பு தீவுகளை சீனா ஆக்கிரமித்துவிட்டு இப்போது வரலாற்றுக்கால உரிமை என பேசுவது தவறானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தென்சீனக் கடற்பரப்பை யுத்தக் களமாக வைத்திருப்பதுதான் சீனாவின் நோக்கமோ?












Click it and Unblock the Notifications