வீட்டு மாடியில் விளையாடச் சென்ற 7ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலி
சென்னை: தாம்பரத்தில் வீட்டு மாடியில் விளையாடச் சென்ற 7ம் வகுப்பு மாணவனின் கை மின்கம்பியில் பட்டதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானான்.
சென்னையை அடுத்த தாம்பரம் லட்சுமிபுரம் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக். துபாயில் டிரைவராக உள்ளார். அவரது மனைவி சுலேகா பேகம். அவர்களது மகன் பயாஸ்(12). மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்தான். நாகர்கோவிலில் இருந்து தங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களை அழைத்துச் செல்ல சுலேகா தனது மகனுடன் நேற்று மாலை தாம்பரம் வந்தார். ஆனால் உறவினர்கள் தாம்பரம் வர நேரமாகும் என்று தெரிந்ததையடுத்து அவர் மகனுடன் முடிச்சூர் சாலையில் கக்கன் தெரு சந்திப்பில் உள்ள குடும்ப நண்பர் ஜெகநாதன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவர் ஜெகநாதன் குடும்பத்தாருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையே பயாஸ் அங்கிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியில் விளையாடச் சென்றான். மாடிக்கு செல்லும் படிக்கு மேலே உயர் அழுத்த மின்கம்பி செல்வதைக் கவனிக்காமல் பயாஸ் அதில் கையை வைத்துவிட்டான். இதில் அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் அவன் உடல் கருகி மின்கம்பியில் பிணமாகத் தொங்கினான். இதையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது போன்று பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை மாற்றியமைக்கக் கோரியும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் வீடுகளுக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை உடனே மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications