இலங்கையருக்கு இரட்டைக் குடியுரிமை.. கோத்தபாய நேரில் விசாரணை நடத்துகிறார்!
கொழும்பு: வெளிநாடுகளில் வாழும் இலங்கை நாட்டவருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலர் கோத்தபாய ராஜபக்சே தலைமையிலான குழு விசாரிக்கும். இதற்கு முன்னர் இலங்கையில் இத்தகைய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது இல்லை.
1980களில் இலங்கையிலிருந்து ஈழத் தமிழர்களும் கணிசமான சிங்களரும் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். பின்னர் அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களாகினர். தற்போது போர் முடிவுற்ற நிலையில் இலங்கைக்கு திரும்பி இரட்டை குடியுரிமை கோருவோருக்கும் புலிகளுக்குமான தொடர்பு பற்றி விசாரிக்கவே கோத்தபாய தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் வெளியுறவு செயலர் கருணதிலக அமுனுகம, பொது நிர்வாக செயலர் அபயகோன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்போர் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், ஐந்து ஆண்டுகாலம் இலங்கையில் நிரந்தரமாக தங்க முதலில் அனுமதிக்கப்படும். பின் அவரின் செயல்பாடுகளைப் பொறுத்து இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்.
இதற்கான கட்டணமாக ரூ2 லட்சத்தை இரு தவணைகளில் கட்ட வேண்டும். 1987-ம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 4 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக பரிசீலனையில் இருக்கிறது.,
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications