டெல்லி பலாத்கார வழக்கில் கைதான ஒருவன் மைனர் - சிறார் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி: நாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் சிக்கி கைதான 6 பேரில் ஒருவன் மைனர் என்று சிறார் சீர்திருத்த வாரியம் அதாவது சிறுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிறுவன் என்று அறிவிக்கப்பட்டுள்ள இவன்தான் அந்த பிசியோதெரப்பி மாணவியை 2 முறை பலாத்காரம் செய்தும், இரும்புக் கம்பியால் வயிற்றில் பலமாக தாக்கி அந்த மாணவியின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 16ம் தேதி தெற்கு டெல்லியில் இரவில் பஸ்சில் தனது நண்பருடன் பயணித்த அந்த 24 வயது மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பஸ்சில் வைத்து நையப்புடைத்தது. பின்னர் அவரை கொடூரமாக ஆறு பேரும் பலாத்காரம் செய்தனர்.

சிறுவன் செய்த அடாத செயல்
ஆறு பேரில் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டவன் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சிறுவன்தான் மிக மோசமான முறையில் நடந்து கொண்டான்.

மயக்க நிலையிலும் பலாத்காரம்.. இரும்புக் கம்பியால் தாக்கு
அந்த மாணவி மயக்க நிலைக்குப் போன பின்னரும் கூட அந்த சிறுவன் கொடூரமாக பலாத்காரம் செய்தான். மேலும் இரும்புக் கம்பியாலும் வயிற்றில் பலமாக தாக்கினான்.

உயிரிழப்புக்கும் இவனே முக்கியக் காரணம்
மாணவியின் உயிர் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் பறி போக இந்த மைனர் பையனின் செயலே காரணம் என்பது காவல்துறையினரின் கருத்தாகும்.

மைனர் என சிறார் நீதிமன்றம் அறிவிப்பு
இந்த நிலையில் இவன் மைனர் என்பதால், மற்ற ஐவரோடும் சேர்த்து இவனை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று சிறார் சீர்திருத்த வாரியம் அதாவது சிறுவர் நீதிமன்றம் அறிவித்து விட்டது. இதனால் இந்த குற்றவாளிக்கு பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்பே இல்லை. அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே கிடைக்கும்.

பள்ளிச் சான்றிதழ் அடிப்படையில்
அந்த சிறுவனின் பள்ளிச் சான்றிதழ் மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இவன் மைனர் என்று இன்று மாஜி்ஸ்திரேட் அறிவித்தார்.

பொதுமக்கள் அதிர்ச்சி
மிகப் பெரிய அளவில் பரபரப்பையும், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளையும் பரப்பிய இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மைனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications