5 தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை- உரிமைக் குழு நடவடிக்கைக்குப் பரிந்துரை
சென்னை: சட்டசபையில் இன்று அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் மீது கடும் தாக்குதகல் தொடுத்த ஐந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று இந்த விவகாரத்தை உரிமைக் குழு பரிசீலனைக்கு சபாநாயகர் அனுப்பி வைத்தார்.
தமிழக சட்டசபையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ஒரு சண்டை நடந்தது. அதில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஒன்றாக திரண்டு சென்று அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனை அடித்து வெளுத்து விட்டனர். சட்டசபையே இதனால் பரபரப்பாகிப் போனது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் அத்தனை தேமுதிக எம்.எல்.ஏக்களையும் அவைக் காவலர்களை வைத்து வெளியேற்றினார் சபாநாயகர் தனபால்.
அதன் பின்னர் அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில், அவையின் நடவடிக்கைளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இன்று தேமுதிக உறுப்பினர்கள் நடந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக உறுப்பினர்கள் பார்த்தசாரதி, வி.சி.சந்திரகுமார், வெங்கடேசன், முத்துக்குமார், பார்த்திபன் ஆகியோர் மிகவும் மோசமான முறையில் அவையின் உரிமையை மீறும் வகையில்நடந்து கொண்டுள்ளனர். எனவே இவர்கள் மீது உரிமைக் குழு விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவைத் தலைவருக்குப் பரிந்துரைக்கிறேன் என்றார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்பி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications