அவரை எனக்கு தெரியும்… ஆனால் பேரத்தில் தொடர்பில்லை: சஞ்சீவ் ஜூலி தியாகி
டெல்லி: 2010 ஆம் ஆண்டு நடந்த பாதுகாப்பு அமைச்சக ஹெலிகாப்ட்டர் பேரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி தியாகியின் சகோதரரும்,இத்தாலிய விசாரணை அதிகாரிகளால் இந்த பேரத்தில் முக்கிய தொடர்பாளராக கூறப்பட்டுள்ள "சஞ்சீவ் ஜூலி தியாகி" தெரிவித்துள்ளார்.
விவிஐபிகளுக்காக ரூ 3600 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ 362 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டது சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இதில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி தியாகியின் சகோதர் "சஞ்சீவ் ஜூலி தியாகி" என்பவர் முக்கிய சந்தேகத்துக்கிடமானவர்களில் ஒருவராக இத்தாலிய கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சஞ்சீவ் ஜூலி தியாகி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"வியாபாரத்தில் தொடர்பு உண்டு ,பேரத்தில் தொடர்பு இல்லை. மொத்த கதையும் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்தின் இடைத்தரகர் கூடோ ஹஸ்கியால் (Guido Haschke) புனையப்பட்டது என்று கூறினார்.
எஸ்.பி. தியாகி பதவியில் இருந்த காலத்தில் ஒரு போதும் என்அலுவலகத்துக்கு வரவில்லை. இது சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் சமர்ப்பித்து விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் இந்த விவகாரத்தில் நான் தினசரி புகார்கள் என்ற பெயரால் கற்பழிக்கப்படுகிறேன்.
ஃபின் மெக்கானிக்காவின் துணை நிறுவனங்களான அன்சால்டோ எனர்ஜியா மற்றும் அன்சால்டோஎஸ்.டி.எஸ்.ஆகியவற்றுடன் எனக்கு தொடர்பு இருந்தது உண்மைதான். ஆனால் ஹெலிகாப்டர் வாங்குவதைப்பற்றி ஒரு போதும் முன்னாள் விமானப்படை தளபதியுடன் விவாதிக்கவில்லை.
கூடோஹஸ்கியின் பிஸினெஸ் பார்ட்னர் கார்லோ கெரோசாவை பல வருடங்களாகத் எனக்குத் தெரியும். அவர் மூலம்தான் கூடோஹஸ்கியை சந்தித்தேன்.
எனக்கு சுவிஸ் வங்கி கணக்கோ அல்லது கிரெடிட் கார்டோ கிடையாது. இந்த பண பேர விவகாரத்தில் புகாரில் சிக்கியுள்ள டெல்லி வழக்கறிஞர் கெளதம் கெய்தானுடன் எந்த வியாபாரத் தொடர்பும் இல்லை. ஆனால் அவரை நான் அறிவேன் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கூடோ ஹஸ்கி பணத்தை சுருட்டிக்கொள்ள தன்னைப்பற்றி இப்படி கதை கட்டிவிடுவதாகவும் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications