இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் வருமா?... வராதா?

''ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய தாக்குதல்களைப் போர்க் குற்றங்கள் என்றும் இனப் படுகொலைகள் என்று பிரகடனப்படுத்தி இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்பது திமுகவின் முக்கிய நிபந்தனையாகும்.
இந் நிலையில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடன் டெல்லியில் நிருபர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத்,
நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை. இதனால், அவர்களுடன் பேசி ஒருமித்த கருத்தை உருவாக்க முடியுமா என்று மத்திய அரசு 'ஆய்வு' செய்து வருகிறது. பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமல், ஒருமித்த கருத்து இல்லாமல் இதில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்றார்.
நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர பாஜகவும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் சரத்பவாரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதையே காரணமாகக் காட்டி, ஒருமித்த கருத்து இல்லை என்று கூறிவிட்டு, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் திட்டத்தையே மத்திய அரசு கிடப்பில் போடப் போடலாம் என்று கூறப்பட்டது.
மேலும் இனி என்ன தான் செய்தாலும் திமுக மீண்டும் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்பதாலும் இந்தத் தீர்மானம் கொண்டு வரும் திட்டத்தை கைவிடலாம் என்று கூறப்பட்டது.
ஆனாலும், தமிழக வாக்குகளை மனதில் வைத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டோம் என்று காட்டிக் கொள்ள மத்திய அரசு முயல்வதாகத் தெரிகிறது.
இதனால் இன்றிரவு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் மீராகுமார் இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
அதில் ஒருமித்த கருத்து ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications